செம்பருத்தி தேயிலையின் நன்மைகள் – Benefits of Hibiscus Tea in Tamil

உலகளவில் மூலிகை தேயிலையின் தேவை அதிகரித்து வருகிறது. தேநீர் சோம்பலை அகற்றுவதோடு, இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. மூலிகை தேநீர் வகையில் சிறப்பு வாய்ந்தது செம்பருத்தி தேநீர் (Hibiscus Tea in Tamil) . பெயரைக்கேட்ட உடனே இது புதிதாக தெரியலாம். இந்த கட்டுரையில் செம்பருத்தி தேநீரின் நன்மைகளைப் பற்றி பார்க்க இருப்பதோடு மட்டுமல்லாது, அதன் அற்புதமான பலன்களை தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த தேநீர் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்படுகிறது மற்றும் பல உடல் பிரச்சினைகளுக்கு சாதகமான விளைவுகளைக் காட்டும். அடுத்து செம்பருத்தி தேநீரின் நன்மைகள் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.
Table Of Contents
செம்பருத்தி தேயிலையின் நன்மைகள் – Benefits of Hibiscus Tea in Tamil
செம்பருத்தி தேநீரின் நன்மைகளை அறிந்து கொள்வதற்கு முன், அது உடல் ஆரோக்கியமாக இருக்க மட்டுமே உதவும் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள உடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவும். ஆனால் எந்த வகையிலும் சிகிச்சையளிக்க பயன்படுத்தக்கூடாது.
1. உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் அதிக கலோரி உட்கொள்ளப்படுவது. அதே நேரத்தில், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ரிசர்ச் பார்மகாலஜி அண்ட் பார்மகோ தெரபியூடிக்ஸ் (ஐ.ஜே.ஆர்.பி.பி) நடத்திய ஆராய்ச்சி, அதிக கலோரி கொண்ட உணவுகள் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்டுகளின் வடிவத்தில் உள்ளன. இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உள்ளது. அதே நேரத்தில், செம்பருத்தி இதழ் தேநீர் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் மாவுச்சத்தின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அமிலேஸ் நொதியால் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையைத் தடுக்கிறது. இது எடை இழப்புக்கு பங்களிக்கும் (1).
2. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது
ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியின் படி, செம்பருத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுவது தெரிய வந்துள்ளது. உண்மையில், அதன் இலை சாறு நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது நீரிழிவு பிரச்சினையைத் தடுக்கவும் நிவாரணம் பெறவும் உதவக்கூடும் (2).
3. கொழுப்பைக் குறைக்க உதவுகிறது
செம்பருத்தி ஏராளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவும். உண்மையில், உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று நன்மை பயக்கும், மற்றொன்று தீங்கு விளைவிக்கும் கொழுப்பு. குறைந்த அடர்த்தி கொண்ட லிப்பிட் கொழுப்பு (எல்.டி.எல்) தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. செம்பருத்தி தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எல்.டி.எல் அளவைக் குறைக்க உதவும்.
4. இதய நோயைத் தடுக்க உதவுகிறது
செம்பருத்தி தேயிலையை இதய ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படலாம். உண்மையில், அதிகரித்த அளவு கொழுப்பு இதயத்தை சேதப்படுத்தும் வகையில் செயல்படுகிறது (3). ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, செம்பருத்தி தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைக்கிறது. இது இதயப் பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதய பிரச்சனையால் இரத்த நாளங்கள் சேதமடையும் அபாயமும் உள்ளது. எனவே, செம்பருத்தி தேநீரின் நன்மைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
5. கல்லீரல் பாதிப்பிற்கு தீர்வளிக்கிறது
செம்பருத்தி தேநீர் பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். ஒரு ஆய்வின்படி, கல்லீரல் கோளாறுகளுக்கு இது பலனளிப்பது தெரிய வந்துள்ளது (4). இருப்பினும், இது எந்த வகையான கல்லீரல் கோளாறுக்கு சாதகமான விளைவைக் காட்டக்கூடும் என்பதை ஆராய்ச்சி குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் செம்பருத்தி, தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் நோய் அபாயத்தைத் தடுக்கலாம் என்று மற்றொரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இந்த அடிப்படையில் செம்பருத்தி தேநீர் குடிப்பதால் கல்லீரலுக்கு நன்மை பயக்கும் என்று கூறலாம்.
6. பதட்டத்தை நீக்குவதன் மூலம் தூக்கத்தை மேம்படுத்துகிறது
பதட்டத்திலிருந்து ஓய்வெடுப்பது நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யாராவது கவலைப்பட்டால், அவருக்கு தூங்குவதில் பிரச்சனை இருக்கலாம். இங்கு செம்பருத்தி தேநீர் பயன்படுத்துவது ஓரளவிற்கு நன்மை பயக்கும். உண்மையில், ஒரு ஆராய்ச்சி பண்டைய காலத்திலிருந்தே செம்பருத்தி பல உடல் பிரச்சினைகளுடன், மன கவலையைப் போக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகிறது. செம்பருத்தியின் இந்த பண்புகளுக்கு பின்னால், ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு இருப்பதாக நம்பப்படுகிறது (5). இந்த அடிப்படையில், செம்பருத்தி தேநீர் பதட்டத்தை ஓரளவிற்கு நீக்குவதன் மூலம் தூக்கத்தை மேம்படுத்த உதவும் என்று கூறலாம்.
7. வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்கொள்ள உதவுகிறது
செம்பருத்தி தேநீர் பயன்படுத்துவது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தடுப்பதில் நன்மை பயக்கும். ரோசெல்லே எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் ஆண்டிபராசிடிக் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் பல பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவற்றை விலக்கி வைக்க உதவுகின்றன. இதனால் செம்பருத்தி உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது (6).
8. ஆண்டிடிரஸன் விளைவு
பதட்டத்துடன், மனச்சோர்வு ஏற்பட்டால் செம்பருத்தி தேநீர் பயன்படுத்தலாம். உண்மையில், செம்பருத்தி சாறுகள் ஆண்டிடிரஸன் விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது மனச்சோர்வு ஏற்பட்டால் ஓய்வெடுக்க உதவும் (7).
9. புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
செம்பருத்தி தேநீர் பயன்படுத்துவதும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோயைத் தவிர்க்க ஓரளவிற்கு உதவும். உண்மையில், பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், செம்பருத்தி சாற்றில் ஆன்டிகான்சர் பண்புகள் உள்ளன, அவை புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க உதவக்கூடும் (8). அதே நேரத்தில், மற்றொரு ஆராய்ச்சி மார்பக புற்றுநோயை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக கூறுகிறது (9).
குறிப்பு: புற்றுநோயானது ஒரு கொடிய நோயாகும். அதற்கு வீட்டு வைத்தியம் மூலம் சிகிச்சை சாத்தியமில்லை. எனவே, ஒரு நபர் இந்த நோய்யினால் பாதிக்கப்பட்டால், அவர்கள் விரைவில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
10. தோல் பிரச்சனைகளை நீக்குகிறது
செம்பருத்தி சருமத்திற்கு நன்மை பயக்கும். உண்மையில், இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா தொற்றிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் முக்கிய விளைவைக் காட்டக்கூடும் (10).
11. முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
என்.சி.பி.ஐ வெளியிட்டுள்ள விஞ்ஞான ஆய்வின்படி, செம்பருத்தி செடி இலை மற்றும் மலர் சாற்றில் காணப்படும் பெட்ரோலியம் ஈதர் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது (11).
அடுத்து செம்பருத்தியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகளின் அளவைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
செம்பருத்தி தேநீரின் ஊட்டச்சத்து மதிப்பு
செம்பருத்தி தேநீரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகளின் அளவை அடுத்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள் | 100 கிராம் அளவுக்கு |
தண்ணீர் | 99.58 கிராம் |
கால்சியம் | 8 மி.கி. |
இரும்பு | 0.08 மி.கி. |
மெக்னீசியம் | 3 மி.கி. |
பாஸ்பரஸ் | 1 மி.கி. |
பொட்டாசியம் | 20 மி.கி. |
சோடியம் | 4 மி.கி. |
துத்தநாகம் | 0.04 மி.கி. |
நியாசின் | 0.04 மி.கி. |
ஃபோலேட் , டி.எஃப்.இ. | 1 µg |
செம்பருத்தி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
செம்பருத்தி தேநீர் தயாரிப்பது எப்படி என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், கீழே குறிப்பிட்டுள்ள இந்த முறை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தேவையானவை
- உலர்ந்த செம்பருத்தி பூக்களின் பொடி ஒரு ஸ்பூன்
- சுமார் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர்
- புதினா இலைகள் (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு (விரும்பினால்)
- ஒரு ஸ்பூன் தேன் (சுவைக்க)
செம்பருத்தி தேநீர் தயாரிப்பது எப்படி?
- முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அடுப்பில் வைக்கவும்.
- பின்னர் உலர்ந்த செம்பருத்தி பூ பொடியை அதில் போடவும்.
- தேநீரின் நிறம் சிவப்பு நிறமாக மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளலாம்.
- ருசிக்கு தேன் சேர்க்கலாம். கோப்பையின் மேல் அழகுபடுத்த எலுமிச்சை துண்டுகள் மற்றும் புதினா இலைகளை வைக்கலாம்.
எப்போது குடிக்க வேண்டும்?
இந்த சிறப்பு தேநீர் காலையிலும் மாலையிலும் உட்கொள்ளலாம்.
எவ்வளவு குடிக்க வேண்டும்?
நீங்கள் தினமும் இரண்டு செம்பருத்தி தேநீர் வரை குடிக்கலாம். நீங்கள் ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையின் பேரில் அதை எடுத்துக் கொண்டால் நல்லது.
செம்பருத்தி தேயிலையின் பக்க விளைவுகள் – Side Effects of Hibiscus Tea in Tamil
செம்பருத்தி தேநீர் உட்கொள்வது நன்மை பயக்கும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது தீங்கு விளைவிக்கும். அது எவ்வாறு என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
- குறைந்த இரத்த அழுத்தம் – உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க செம்பருத்தி தேநீர் பயன்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அதிலிருந்து விலகி இருங்கள். குறைந்த இரத்த அழுத்த நோயாளிகளில், அதன் உட்கொள்ளல் மயக்கம் மற்றும் தலைச்சுற்றலுடன் இதயம் மற்றும் மூளைக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
- கர்ப்பிணி பெண்களுக்கு – கர்ப்பிணி பெண்கள் செம்பருத்தி தேநீர் உட்கொள்ளக்கூடாது. இது மாதவிடாய் ஓட்டத்தை அதிகரிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது, இது கர்ப்ப காலத்தில் கருப்பை மற்றும் இடுப்புக்கு இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு செயல்படும். இது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
- மாயத்தோற்ற விளைவு – செம்பருத்தி தேநீர் உட்கொள்வதன் மூலம் சிலர் போதை அல்லது ஒருவித குழப்பத்தை உணரலாம்.
- ஒவ்வாமை – செம்பருத்தி தேநீர் உட்கொள்வதில் பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கலாம்.
முடிவாக
செம்பருத்தி தேநீர் உட்கொள்வது தேயிலை விட சிறந்த வழியாகும். தேயிலையை காட்டிலும் ஒரு நபரை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவும். இது ஒரு வகை மூலிகை தேநீர். எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கடுமையான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். உடல்நலம் தொடர்பான பிற தகவல்களுக்கு, எங்கள் பிற கட்டுரைகளைப் படிக்கலாம்.
11 Sources

Latest posts by StyleCraze (see all)
- பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் செலரி ஜூஸ், இதைப்பற்றி கேள்விப்படாமலே போறீங்களா? - March 30, 2021
- உங்கள் அன்பானவர்களுக்கு பகிர 55 சிறந்த ஹோலி வாழ்த்துக்கள் - March 26, 2021
- வண்ணங்களின் சங்கமமான ஹோலி அன்று உங்கள் அழகை அப்படியே வைத்திருக்க சில குறிப்புகள் - March 26, 2021
- உயர் இரத்த அழுத்தத்திற்கான உணவு அட்டவணை – Diet for High BP in tamil - March 25, 2021
- சின்னம்மைக்கு எளிமையான வீட்டு வைத்தியங்கள்! ரிஸ்க்கே தேவையில்லை! - March 25, 2021
